• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர காவல்துறை சார்பில் உலக மனநல நாள் விழா

October 11, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர காவல்துறை சார்பில் உலக மனநல நாள் விழா (World Mental Health Day) நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் . V. பாலகிருஷ்ணன், அவர்கள் அறிவுரையின்படி, கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உலக மனநல நாள் விழாவையொட்டி (World Mental Health Day) மேற்படி சிறப்பு வகுப்புகளை காவலர் நிறைவாழ்வு மேற்கு மண்டல ஒருக்கிணைப்பாளர் K. ருத்ரா , மனநல டாக்டர் B. கண்ணன், MD (PSY) எடுத்தார்கள்.

காவலர் நிறைவாழ்வு மேற்கு மண்டல ஒருக்கிணைப்பாளர் K.ருத்ரா,Emotional Management என்ற தலைப்பில் கோபமடையும் சூழ்நிலையில் எவ்வாறு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது என்பது குறித்து உரையாற்றினார்.மனநல டாக்டர் B. கண்ணன் Mental Health என்ற தலைப்பில் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உரையாற்றினார்.

இதில் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் . A. சேகர், காவல் ஆய்வாளர்கள் K. கோவிந்தராஜூ,M.பிரதாப்சிங், சமூகநல ஆர்வலர் S.சிவராமகிருஷ்ணன்,காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க