April 8, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 570 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டி மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைத்து நோய் பரவுதலை கட்டுபடுத்தி வருகின்றனர். இதனால் தொழில் துறை மற்றும் அன்றாடம் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு ஒரு வேளை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.அதே நேரத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள் இவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று வடவள்ளி மண்டல் சார்பாக தேசிய தலைவர், மாநிலத் தலைவர், மாவட்ட தலைவரின் அறிவுறுத்தல் படி துப்புறவு தொழிலாளர்கள் காவலர்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் வடமாநில கட்டிடத் தொழிலாளிகள் காலை உணவு 220 பேருக்கும் மதிய உணவாக 350 பேருக்கும் வழங்கப்பட்டது.
இதில், மண்டல பார்வையாளர்
வி சி ஆனந்தகுமார்,பொறுப்பாளர்கள்
வேல்முருகன், பூபாலன் மற்றும் மாநில, மண்டல நிர்வாகிகள் வெண்ணிலா (வழக்கறிஞர்) ஜோதிபாசு பிரதாப் சசிகுமார் சௌமியாராணி நந்தகுமார் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.