• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

October 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவ, மாணவிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக மாநகராட்சி பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்திப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் மற்றும் பிற உடல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மாநகராட்சி பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் சார்பில் நாள்தோறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

மேலும் படிக்க