• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 130 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

May 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 130 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 80 மற்றும் 81-வது வாா்டுகளில் பணியாற்றி வந்த இரு தூய்மை பணியாளா்கள் அன்மையில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா்.இதையடுத்து மாநகராட்சியில் பணியாற்றும் 1900 நிரந்தர மற்றும் 3685 தற்காலிக என அனைத்து சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அண்ணல் அம்பேத்கா் பொது சுகாதாரம், தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 80, 81 மற்றும் 51-வது வாா்டுகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 130 பேருக்கு நேற்று சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து கிழக்கு மண்டலத்தில் இன்றும் சளி மாதிரி சேகரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதாக, மாநகராட்சி முழுவதும் இப்பணி நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க