• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 130 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

May 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 130 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 80 மற்றும் 81-வது வாா்டுகளில் பணியாற்றி வந்த இரு தூய்மை பணியாளா்கள் அன்மையில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா்.இதையடுத்து மாநகராட்சியில் பணியாற்றும் 1900 நிரந்தர மற்றும் 3685 தற்காலிக என அனைத்து சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அண்ணல் அம்பேத்கா் பொது சுகாதாரம், தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 80, 81 மற்றும் 51-வது வாா்டுகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 130 பேருக்கு நேற்று சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து கிழக்கு மண்டலத்தில் இன்றும் சளி மாதிரி சேகரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதாக, மாநகராட்சி முழுவதும் இப்பணி நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க