• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்றா?

January 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு காய்ச்சல் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டனர்

கோவையில் கொரோனா தொற்று 3-வது அலை, பரவல் வேகமாக இருந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் குறைவாக இருந்த பாதிப்பு நேற்றைய தினம், 11 ஆயிரத்து, 594 என அதிகரித்து உள்ளது. ஒரு நாள் பாதிப்பு 2,000த்தை கடந்து விட்டது. சளி மாதிரி சேகரித்து பரிசோதித்தால் 20 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது.

நேற்று முன்தினம் 9,550 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில் 2042 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா சிகிச்சை முகாமில் 230 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 120 தெருக்களில் 4 பேருக்கும் மேலான நோயாளிகள் இருக்கின்றனர்.
மாநகராட்சி பகுதியில் மண்டலத்தில் 1200 பேர் வீதம், நாளொன்றுக்கு 6000 சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில், 15 சதவீதத்தினருக்கு தொற்று உறுதியாகிறது.

இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் மற்றும் சுகாதார அலுவலர் சதீஸ்குமார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஆனால் சுகாதார அலுவலர் சதீஸ் தனக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிக்கும் வந்துவிட்டார்.

ஆனால் மாநகராட்சி கமிஷனருக்கு காய்ச்சல் மற்றும் சளி சொந்தரவு இருந்த காரணத்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
மாநகராட்சி கமிஷனருக்கு கொரோனா என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க