• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் 5 மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் திமுக உறுப்பினர்கள் வெற்றி

March 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 97 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும் கைபற்றியது.இந்நிலையில் மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில் திமுகவில் வடக்கு மண்டலத்திற்கு கதிர்வேல்,தெற்கு மண்டலதிற்கு தனலட்சுமி,கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டலத்திற்கு தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

திமுக கூட்டணியில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 5 பேரும் மண்டல தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கதிர்வேல் ஆட்டோ ஒட்டுநனர்.ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டவர்.இவர் கோவை மாநகராட்சி 10வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க