• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் ரூ.2,337 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் மேயர் பட்ஜெட் தாக்கல்

March 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட், மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற மாமன்ற சிறப்பு கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பட்ஜெட்டை மேயரிடம் அளிக்க அதனைப் பெற்றுக் கொண்ட மேயர், பிறகு முறைப்படி மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
இதில் பொது நிதி, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி, ஆரம்பக்கல்வி நிதி என்ற வகைகைகளில் மொத்த வருவாய் வரவினம் ரூ.834 கோடியே 26 லட்சம் என்றும், மூலதன வரவினம் ரூ.1,483 கோடியே 71 லட்சம் என்றும், மொத்தமாக ரூ.2,317 கோடியே 97 லட்சம் வருவாய் மற்றும் மூலதன வரவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மொத்த வருவாய் செலவினம் ரூ.718 கோடியே 60 லட்சம் என்றும், மூலதன செலவினம் ரூ.1,618 கோடியே 68 லட்சம் எனவும், மொத்தமாக வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் ரூ.2,337 கோடியே 28 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.19 கோடியே 31 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பட்ஜெட் தாக்கலின் போது உடனிருந்தனர்.பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மாலை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் பட்ஜெட் மீதான விவாதத்தை புறக்கணித்தனர்.

மேலும் படிக்க