• Download mobile app
06 Aug 2025, WednesdayEdition - 3465
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாதம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

January 27, 2022 தண்டோரா குழு

கோவை மாதம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த விலை உயர்த்த டிவி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

கோவை மாதம்பட்டி அடுத்த செல்லப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் இவரது மகன் ஹரிபிரசாத், கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறது. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னை தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுந்தரமும் தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் முன்கதவு திறந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் ஹரிபிரசாத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மாலை வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த சோனி டிவி மற்றும் 2 பவுன் நகை 15 ஆயிரம் ரொக்கம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பேரூர் காவல்போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயவியல் துறையினர் பீரோ கதவு போன்ற இடங்களில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க