• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை

May 2, 2018 தண்டோரா குழு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதி கோவை மத்திய சிறையில், மின்விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மத்திய சிறையில் சீனிவாசன் என்ற கைதி,சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.ஈரோட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு இருந்தார்.இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சிறையில் இருந்த மின் விசிறியில், அவரது லுங்கியால் தூக்கிட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.சிறைத்துறை காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க