• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

February 25, 2022 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (32) இவரது மனைவி ரெஜினா பானு இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகமது அசாருதீன் (10) முகமது அர்சத்தீன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மூத்த மகன் ரெஜினா பானுவுடனும், இளைய மகன் சாதிக் பாஷா வுடனும் வசிக்கின்றனர். இந்நிலையில் இளையமகன் அர்ஷத்தீனை, சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோ குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சாதிக் பாஷாவை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்காமல் இருந்த நிலையில் இளைய மகன் தாய் ரெஜினா பானுவை சந்தித்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக கூறி உள்ளார். இதேபோல் அப்பகுதியில் உள்ள அவர்கள் கூறும்போது அடிக்கடி மது போதையில் வந்து மகனை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கி வருவதாகவும் சிறுவனை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க