• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க விழா

May 1, 2020 தண்டோரா குழு

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.

கோவையில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.அதனடிப்படையில் உணவு வழங்குவது,வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பொதுமக்களுக்கு 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க நிகழ்ச்சி கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளரும்,கோவை மக்கள் சேவை மையத்தின் தலைவருமான வானதி சீனிவாசன் ஆலோசனையின் பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கோவை மருத்துவ கல்லூரியின் முன்னாள் டீன் இந்திரா ப்ரனேஷ் தொடங்கி வைத்தார்.மாஸ்க்குகள் அனைத்தும் கோவையில் தேவையுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க