January 24, 2020
கோவை போலீஸ் அருங்காட்சியகத்தை அரசு பள்ளி மாணவர்கள் இன்று பார்வையிட்டு சென்றனர்.
கோவை ரயில் நிலையம் எதிரில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு நாள்தோறும் மக்கள் வருகை புரிந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று கோவை ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளி, கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஐசிசி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் போலீஸ் அருங்காட்சியாகத்திற்கு வருகை புரிந்தனர். இதில் 84 மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்களும் உடன் வந்திருந்தனர். அவர்கள் போலீசார் அருங்காட்சியகத்தை மிகவும் வியப்புடன் பார்வையிட்டு சென்றனர்.
இது குறித்து ஆசிரியை மேகன்சுபா,
பல நூற்றாண்டு முதல் இருந்த போலீஸ் உடைகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருந்தன. போலீசாரின் பணிகள் குறித்து நிறைய விஷங்கள் தெரிந்தன. கண்டிப்பாக நிறைய பள்ளி மாணவர்கள் இதை காணவேண்டும் இதன் மூலம் நிறைய அனுபவங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றார்.
இது குறித்து ஆசிரியர் சுரேஷ் குமார் கூறுகையில்,
கோவையில் உள்ள முக்கியமான இடங்களை மாணவர்கள் அறியவேண்டும் இன்று நாங்கள் பல இடங்களுக்கு சென்றோம். அதன் ஒரு பகுதியாக போலீஸ் குறித்து மாணவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக இங்கு வந்தோம். காவல் துறை பணிக்கு செல்ல ஆர்வம் உள்ள மாணவர்கள் இங்கு வந்து பார்த்தால் அவர்கள் மனதில் ஒரு உத்வேகம் உண்டாகும். காவல்துறையினரின் பணிகள் மற்றும் பயன்படுத்தும் கருவிகள் போன்றவற்றை உண்மையாக பார்த்து உணருக்கிறார்கள் என்றார்.
மாணவர்கள் மகபூப் சுபாணி கூறும்போது,
போலீஸ் அருங்காட்சியத்தை இதுவரை பார்த்ததில்லை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன். எனக்கு பிடித்த மிலிட்டரி டாங்கி இருத்தது. நான் என்சிசி மாணவர் என்பதால் நிறைய போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்களை பார்த்தேன் அது வியப்பாக இருந்தது. அதுமன்றி போலீசாரின் பல வரலாறுகள், மற்றும் வழக்குகள் குறித்தும் அறிந்தேன் என்றார்.