• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

December 20, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜ பெருமானை வணங்கி பரவசமடைந்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அன்று முதல் தொடர்ந்து 9 நாட்கள் காலை மாலை வேளைகளில் திருவெம்பாவை உற்சவம், மாணிக்க வாசகர் வீதி உலா, கிளி வாகன சேவை மற்றும் சோமாஸ்கந்தர் திருவீதி உலா உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அருள்மிகு நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அருள்மிகு நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு சிறப்பாக காட்சி அளிக்கவே இரவு முதலே இந்த காட்சிக்காக காத்திருந்த ஏராளமான பக்தர்கள் எம்பெருமானை பக்தி பரவசத்துடன் துதித்து சென்றனர்.

மேலும் படிக்க