January 13, 2020
கோவை புதூர் பகுதியில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்றனர்.
கோவை புதூர் பகுதியில் குட்டி பெத்தலகேம் ஆன அற்புத குழந்தை இயேசு திருத்தலம் உள்ளது இந்த திருத்தலத்தில் இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குழந்தை ஏசு தேர் கோவைபுதூர் பகுதியிலிருந்து முக்கியச் சாலைகள் வழியாக பவனி வந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றனர் மேலும் இந்த ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறும்போது அனைவரிடம் அன்பாக பழக வேண்டும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் நாடு சுபிட்சமாக இருக்க அனைவரும் பிரார்த்தனை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.