கோவையில் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
பின்னர் புகையிலையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களும் மாணவர்களும் கையெழுத்திட்டனர்.இந்த கையெழுத்து இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புகையிலைக்கு எதிராக கையெழுத்திட்டனர்.மேலும் மருத்துவ மாணவர்கள் புகையிலை ஒழிப்பு குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்.
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு