• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

December 10, 2023 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதுகலை இளங்கலை உட்பட 2416 மாணவிகள் பட்டம் பெற்றனர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது..விழாவில், கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் G.ரவி கலந்து கொண்டு 2019-ம் ஆண்டு மற்றும் முதுநிலை 2020 ஆம் கல்வியாண்டைச் சேர்ந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 46 மாணவிகளுக்கும், முதுநிலைப் பட்டம் பெற்ற 570 மாணவிகள் மற்றும் .1800 இளநிலை மாணவிகள் என மொத்தம் 2416 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர்,

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர்,பாரதியின் கனவு தற்போது நனவாகி வருவதாக குறிப்பிட்டார். கல்வி கற்பதன் அவசியம் பற்றி குறிப்பிட்ட அவர், உலகின் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் இளம் தலைமுறை முக்கிய பங்கு வகிக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.

விழாவில்,புதிய பட்டதாரிகளின் உறுதிமொழியைக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மீனா முன்மொழிந்தார். தொடர்ந்து,விழாவின் நிறைவாக கல்லூரியின் செயலர் டாக்டர் .யசோதா தேவி நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க