• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பிரஸ் டைரி2017வெளியீடு

January 13, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட பத்திரிகை அமைப்புகள் சார்பில்பொதுமக்கள் பயன்பெறும் வகையில்“கோவை பிரஸ் டைரி 2017” வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் தை திருநாளை முன்னிட்டு கோவை பத்திரிகை அமைப்புகள் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோவை மாவட்ட முக்கிய அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல் அதிகாரிகள், ரயில் மற்றும் விமானங்கள் குறித்த தகவல்கள், முக்கிய கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எண்கள் அடங்கிய டைரி வெளியிடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த 2017ம் ஆண்டிற்காக அச்சிடப்பட்ட கோவை பிரஸ் டைரியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆணையாளர் அமல்ராஜ், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் வெள்ளியன்று வெளியிட்டனர்.

மேலும், கைக்கு அடக்கமாகவும் எளிதாக சட்டைப் பையில் வைத்து எடுத்து செல்லக் கூடிய வகையில் இந்த டைரி இருப்பதால் இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தை சார்ந்த பல்வேறு பத்திரிக்கை அமைப்புநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க