December 18, 2019
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. பல்வேறு கட்சியினர், அமைப்பை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்திலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
குடியுரிமை சட்டத் திருத்தம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும்”. என்றனர்.