• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர ஆய்வு மாணவர்கள் போராட்டம்

December 5, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர ஆய்வு மாணவர்கள் கவன‌ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வி பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கப்பட்டது வந்தது. அதை கண்டித்து 2015 ஆண்டு முழுநேர பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். தொலைதூர முழுநேர ஆய்வு பி.எச்.டி பயின்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு கேட்டகிரி – பி என கொடுக்க வேண்டும் என்பதை வலுயுறுத்தியதை 2015 ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை
அவ்வாறு சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தொலைதூர பி.எச்.டி பயின்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் கேட்டகிரி – பி சான்றிதழ் எடுத்துவிட்டு ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்க கவர்னரிடம் பரிந்துரை செய்ய இருப்பதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்தாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து இன்று முழு நேர ஆய்வு மாணவர்கள் சுமார் 70- க்கும மேற்பட்டவர் தரையில் அமர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க