• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

March 7, 2018 தண்டோரா குழு

கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்துள்ளன.இதற்கிடையில் நேற்று இரவு திருப்பரத்தூரில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை சேதப்படுத்தினர்.

இந்நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை 4 மணிக்கு ஒரு ஆட்டோவில் வந்த நான்கு பேர் பாஜக அலுவகத்தில் இருந்து 50 அடிக்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பாஜக அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பினர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க