• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை – பழனி; அதி வேக மோட்டார் பைக்குகளில் சென்று பெண்கள் அசத்தல் !

December 31, 2020 தண்டோரா குழு

உலக நன்மை வேண்டி பழனி மலை முருகனை வேண்டி கோவையிலிருந்து பழனி மலை வரை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் அதி வேக மோட்டார் பைக்குகளில் சென்று அசத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் .அனைத்து மக்களின் நன்மை கருதி பழனி மலை முருகனை வேண்டி . கோவையில் பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள கியர் அப் பைக்கர்ஸ் குழுவை சேர்ந்த பெண்கள் அதி வேக திறன் கொண்ட பைக்குகளை ஓட்டியபடி கோவையிலிருந்து பழனி மலை வரை முருகனை தரிசிக்க ஊர்வலமாக சென்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தலைமையில் கோவையிலிருந்து பழனி மலை வரை செல்லும் இந்த பெண்கள் முன்னதாக அனைத்துலக நன்மை வேண்டி கடந்த ஒரு மாதமாக மாலை அணிந்து விரதம் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கோவையிலிருந்து பழனி முருகனை தரிசிக்க இரு சக்கர அதி வேக பைக்கில் கியர் அப் ரைடர்ஸ் பெண்கள் ஊர்வலமாக சென்றதை அனைவரும் பாராட்டினர்.

மேலும் படிக்க