• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு ; மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை துவக்கம்

November 18, 2021 தண்டோரா குழு

கோவையில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் மல்லிகை, ராமராஜ் சரண்யா ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு இச்சம்பவம் குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

இன்று நடைபெறும் இந்த விசாரணையில் மாணவியின் பெற்றோர், மாணவி உடன் பயின்ற மாணவ மாணவியினர், பள்ளி நிர்வாகிகள், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க