• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் தேரை பாதுகாக்க போடப்பட்ட தகரம் சேதம்

May 30, 2018 தண்டோரா குழு

கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் கோவில் தேரை வெயிலில் இருந்து பாதுகாக்க பயன்படுத்திய தகரம் காற்றில் பறந்ததால் பக்தர்கள் பயந்து ஒட்டம் பிடித்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பங்குனித் திருவிழா மிக விமர்சையாக நடைப்பெற்றது.இவ்விழாவில் பட்டீஸ்வரர் தேரும்,பச்சை நாயகி அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தேர் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலில் காய்ந்தது.பக்தர்கள் கோவில் நிர்வகத்திடம் முறையிட்டதை தொடர்ந்து பச்சைநாயகி அம்மன் கோவில் தேரை சுற்றி மறைக்க தனியாருக்கு கடந்த வாரம் டென்டர் விடப்பட்டு அந்த வேலை நடைப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று திடீரென காற்று வீசியதில் தேரை சுற்றி மறைக்கப்பட்ட தகடுகள் காற்றில் பறந்தது.இதை பார்த்த பக்தர்கள் பயத்தில் சிதறி ஓட்டம் பிடித்தனர்.உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தேரை சுற்றிலும் சுமார் 100 மீட்டருக்கு தடுப்பு அமைக்கப்பட்டு காற்றில் சிதலமடைந்த தேர் மறைப்பு தகடுகளை சரி செய்து வருகின்றனர்.

மேலும்,வெறும் கம்பிகளில் முறுக்கப்பட்டு உள்ளதால்,சரியான முறையில் வேலை செய்யாததே காரணம் எனவும் இதற்கு கோவில் நிர்வாகத்தின் அலச்சியமே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க