• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நகரில் 33 ரவுடிகள் கைது

February 17, 2023 தண்டோரா குழு

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: ‘

கோவை நகரில் 2 கொலைகளை தொடர்ந்து ரவுடி கேங் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு வாகன தணிக்கை, விடுதி தணிக்கை பணிகள் கோவை வடக்கு, தெற்கு பகுதிகளில் நடக்கிறது. தெற்கு நகர்ப்பகுதியில் 7 வழக்குகள் பதிவானது. 36 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 5 கத்தி, கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.

வடக்கு நகர்ப்பகுதியில் 4 வழக்குகள் பதிவானது.28 வீடுகளில் நடந்த சோதனையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது.இதுவரை 11 வழக்குகளில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க