• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தெற்கு தொகுதி – நீண்ட இழுபறிக்கு பின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி !

May 2, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகசட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதியில் இன்று காலையில் இருந்தே கமல்ஹாசன் முதலிடத்திலும், மயூரா ஜெயகுமார் இராண்டாம் இடத்திலும், வானதி ஸ்ரீநிவாசன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

பின்னர், வானதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். நீண்ட நேரம் கமல்ஹாசன் முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், மாலை வேளைக்குப்பின் வானதி சீனிவாசன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.கடந்த சில மணி நேரங்களாக இருவருக்கும் இடையே மிகசிறிய அளவிலான வாக்குவித்தியாசம் நிலவிவந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 41,669 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.

மேலும் படிக்க