• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெப்பக்குளம் மைதானம் பகுதியில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை

October 29, 2020 தண்டோரா குழு

கோவையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் மிகவும் பழமையான இடியும் தருவாயில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க கோரி மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெப்பகுளம் பகுதியில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை காரணமாக பூட்டி கிடந்த கட்டிடத்தின் மேல் பகுதி இன்று மாலை கட்டிடத்தின் மேல் கைப்பிடிச்சுவர் பலத்த ஓசையுடன் விழுந்து சேதமடைந்தது. இதனால் உட்பகுதியில் காங்கிரீட் தரையில் விழுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நூல்கள் சேதமடைந்தன.

அதிஷ்டவசமாக விடுமுறை காரணத்தால் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் திடீரென கட்டிடத்தின் கைப்பிடிச் சுவர் விழுந்து இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க