• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை-திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

April 26, 2022 தண்டோரா குழு

கோவை-திருப்பதி விரைவு ரயிலில் 2 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் கோவை -திருப்பதி விரைவு ரயிலில் ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி என 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

அதேபோல்,திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமைகளில் இயக்கப்படும் திருப்பதி-கோவை விரைவு ரயிலில் ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி என 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க