• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜீவா நகர் பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனே வழங்க வேண்டும் – அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

June 21, 2019 தண்டோரா குழு

கோவை ஜீவா நகர் பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனே வழங்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை சாய்பாபாகாலனியை அடுத்துள்ள கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜீவா நகர், வண்டிப்பாதை பகுதி ஆக்கிரமிப்புகளை பிப்ரவரி 18ம் தேதியில் இருந்து அகற்றப்படுவதாக மாநகராட்சி சார்பில் அங்குள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் இறுதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் இங்குள்ள வீடுகளை காலி செய்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சில வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி டோக்கன் பெற்ற காலி செய்யப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும் 2 நாட்களுக்கு முன்பு இடிக்காமல் உள்ள 120 வீடுகளின் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்து அன்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஜீவா நகர் பகுதியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஜீவா நகர் பகுதியில் இருந்து காலி செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும். அதுவரை துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை அந்தந்த வீடுகளுக்கு தரவேண்டும். இது குறித்து அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் பெரியார் திராவிட கழக மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சி கலையரசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் மலரவன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், த.மு.ம.க. ம.ம.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், ஜீவா நகரில் வசிக்கும் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க