• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜி.எச்.இருப்பிட மருத்துவர் ஓய்வு; கண்ணீர் மல்க அனுப்பிவைத்த பொதுமக்கள்

November 30, 2019 தண்டோரா குழு

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் ஓய்வு பெற்றார். மக்களுக்கு சேவையாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றவர்.பொதுமக்கள் கண்ணீர் மல்க அனுப்பிவைத்தனர்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சௌந்தரவேல். அவர் கோவை மருத்துவமனையில் துணை இருப்பிடம் மருத்துவராக பணிபுரிந்து பிறகு பதவி உயர்வு பெற்று கடந்த 5 வருடங்களாக இருப்பிட மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் பணி புரியும்போது எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், முகம் சுளிக்காமல் தன்னை உதவிக்காக நாடி வரக்கூடிய அனைத்து மக்களையும் அன்புடன் உள்ளே அழைத்து அவர்களுடைய குறைகளை உடனுக்குடன் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வார்.

என்ன மருத்துவ உதவி தேவையோ உடனடியாக செய்து கொடுப்பது வழக்கம். அதேபோல அரசு ஊழியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், காவல்துறையினர் என எல்லாத் தரப்பு மக்களிடமும் மிகவும் அன்புடனும் எளிமையுடனும் பழகி உதவி செய்து வந்தவர். நமக்கு இந்த பணி இறைவன் வழங்கியது. அந்தப் பணியில் இருக்கும் வரை நாம் பொதுமக்களுக்கும் அனைவருக்கும் மருத்துவ துறை சார்பாக உதவியாக இருக்க வேண்டும். நமக்கு விரோதமாக எண்ணம் கொண்டவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று தாரக மந்திரமாக கூற கூடியவர். அவர் பணியில் இருக்கும் பொழுது 24 மணி நேரமும் அவசர தேவைக்காக எப்பொழுது தொலைபேசி மூலமாக அழைத்தாலும் போனை எடுத்து பேசுவார். உடனடியாக பதில் கொடுத்து இந்த வார்டில் நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வார்டிற்கு உடனே தொடர்பு கொண்டு உதவி செய்யும்படி அறிவுறுத்த கூறியவர். இவருடைய பணியையும், இவர் செய்த சமூக உதவிகளையும் பாராட்டி கோவையில் உள்ள அனைத்து சமூக அமைப்புகளும் சிறந்த மருத்துவர் சேகர், மனிதநேய பண்பாளர் உள்பட என 50-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இன்றுடன் அவருடைய அரசு பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். இன்று காலையில் இருந்தே அனைத்து தரப்பட்ட மக்களும் அவருடைய அலுவலக வாசலில் குவிந்து கண்ணீர் மல்க வாழ்த்துக்களை கூறினர். அதை பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருந்தது.

மேலும் படிக்க