• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் சார்பாக சாலையோரம் வசிப்போர்களுக்கு மதிய உணவு

May 27, 2021 தண்டோரா குழு

கோவை ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் சார்பாக காந்திபுரம்,க்ராஸ் கட் சாலையில் ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்போர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வல அமைப்பினர் பலர் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை,காந்திபுரம் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் சார்பாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நாள் துவங்கி தினமும் அந்த பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் முன்பாக,சமூக விலகலை கடைபிடித்து, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு புளி சாதம்,சாம்பார் சாதம்,லெமன் சாதம் என தினமும் சுமார் 250 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க