• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சுந்தாரபுரம் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்

July 7, 2022 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் , சுந்தராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.

அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் மண்ணுடன் வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரிகளில் பயணம் செய்த ஓட்டுனர்கள் மேகநாதன், செந்தில்குமார் ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லாரி ஓட்டுனர் மற்றும் கிளினர் ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாலையில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனையடுத்து
ஜே.சி.பி இயந்திரம்மூலம் இரண்டு லாரிகளையும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.

மேலும் படிக்க