• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் தரமற்ற உணவு ஊழியர்கள் புகார்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை சுங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கேன்டீனில் தரமற்ற அரிசியில் (பிளாஸ்டிக் அரிசி) தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படுவதாக போக்குவரத்து ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இந்த அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தை  உருட்டி வீசினால் பந்து போல மேலே எழும்புவதாக குற்றச்சாட்டி 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று மதிய உணவை புறக்கணித்தனர்.

மேலும் இந்த உணவை உண்ட சில தொழிலாளர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தரமற்ற சாதம் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், ராணியம்மா என்பவரே சுங்கம் பணிமனையின் கேண்டீன் ஒப்பந்ததாரர் என்றும் அவரை மாற்ற வேண்டும் எனவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.பல்வேறு சமயங்களில் தரமற்ற அரிசியை போல் காய்கறிகளும் அழுகிய நிலையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க