• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் தரமற்ற உணவு ஊழியர்கள் புகார்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை சுங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கேன்டீனில் தரமற்ற அரிசியில் (பிளாஸ்டிக் அரிசி) தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படுவதாக போக்குவரத்து ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இந்த அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தை  உருட்டி வீசினால் பந்து போல மேலே எழும்புவதாக குற்றச்சாட்டி 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று மதிய உணவை புறக்கணித்தனர்.

மேலும் இந்த உணவை உண்ட சில தொழிலாளர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தரமற்ற சாதம் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், ராணியம்மா என்பவரே சுங்கம் பணிமனையின் கேண்டீன் ஒப்பந்ததாரர் என்றும் அவரை மாற்ற வேண்டும் எனவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.பல்வேறு சமயங்களில் தரமற்ற அரிசியை போல் காய்கறிகளும் அழுகிய நிலையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க