• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சுகுணாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் – மக்கள் அச்சம் !

November 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதி உள்ளது.
இந்த சுகுணாபுரம் மலை பகுதிகளில் எண்ணற்ற மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள சுகுணாபுரம் கிழக்குப் பகுதியில் தன்னாசி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.நேற்று இரவு அவ்வழியே வந்த ஒருவர் தன்னாசி ஆண்டவர் கேட்டின் மேல் ஏதோ மிருகம் படுத்திருந்தை பார்த்தார். மீண்டும் உற்று நோக்கியபோது அது சிறுத்தை என அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த போது கோயிலின் கேட்டின் மேல் கால் தடமும் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதையும் உறுதி செய்து அவ்விடத்திற்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என அந்த கோவில் பகுதி கேட்டை பூட்டிச் சென்றுள்ளனர்.
சிறுத்தை வந்த செய்தியால் அப்பகுதி பரபரப்பு அடைந்துள்ளது.

மேலும் படிக்க