• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் ஒணம் பண்டிகை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் !

August 21, 2021 தண்டோரா குழு

ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை ஆடிமாதம் அஸ்த்தம் நட்சத்திரம் தினத்தன்று துவங்கி 10 நாட்கள் கொண்டாடப்படும், இந்த 10 நாட்களும் தினமும் வீட்டின்முன் பூக்கோலங்கள் போட்டு, வழிபாடு செய்து கொண்டாடி வருவது வழக்கம் இதில் 10 வது நாள் திருவோண நட்சத்திர நாளன்று திருவோணம் விமர்சையாக மளையாள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், பொது இடங்களில் கூடவோ, ஓணம் தினத்தன்று கோவில்களில் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரானா காலம் என்பதால் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை. பக்தர்கள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்துவருகின்றனர்.

வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி பூக்கள் கோலம், நடனம், விருந்து என கொண்டாடும் ஓணம் பண்டிகை இப்போது அவரவர் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். பப்படம் பழம் பாயாசம் அவியல் அவியல் கூட்டு பொரியல் துவையல் இஞ்சி புளி வகையான பழங்கள் அடைப் பிரதன் என்பது தவிர்க்க முடியாத பாயசம் சாப்பாடு குழம்பு ரசம் மோர் உள்ளிட்ட உணவு வகைகள் இன்று பல்வேறு குடும்பங்களில் உணவாக உட்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க