• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சாய்பாபா காலனியில் தடையை மீறி கிறமாசபை கூட்டம் – 300 க்கும் மேற்பட்டோர் கைது

December 26, 2020 தண்டோரா குழு

கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சாய்பாபா காலனி பகுதிக்கு உட்பட்ட வெங்காட்டாபுரம் மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் காவல்துறையினர் தடுப்பு – பகுதி பொறுப்பாளர் கே எம் ரவி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டு மனுவாக பெறப்பட்டு வருகிறது. இந்த கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், கோவை மாநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சாய்ப்பப்பகாலனி திமுக பகுதி கழகத்தின் 13வது வட்ட சார்பாக கிராமசபை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்ட நிலையில், பொதுமக்களையும்,இதில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, காவல்துறையின் தடையை மீறி சாயிபாபாகாலனி பகுதி பொறுப்பாளர் கே.எம் ரவி, மற்றும் 13வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் துவங்கப்பட்டது. இதனை காவல்துறையினர் தடுத்ததால் தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி கழக பொறுப்பாளர் கே எம் ரவி, 13 வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நந்தகுமார் ,கிருஷ்ணராஜ் ,ஆனந்தகுமார், மோகன் பகுதி பொறுப்பு சுக்குலால் பாபு,மணி 11 வது வட்ட செயலாளர் பிரபு ,12வது வட்ட செயலாளர் அகஸ்டின் தனபால், 45 வட்ட செயலாளர் பாபு என்ற பார்த்திபன், இளைஞரணி பகுதி அமைப்பாளர் கண்ணன்,ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார், இளைஞரணி அமைப்பாளர் பாபு ,ஆறுமுகம், குமார் ,இஷாத், கண்ணன் பத்மநாபன் ,வரதராஜன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க