• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சாந்தி ஆசிரமம் சார்பில் சிறப்பு பொங்கல் விழா !

January 12, 2021 தண்டோரா குழு

குழந்தைகள் முதியவர்கள் இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான ( எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது.

கோவை சாந்தி ஆசிரமம் சார்பில் குழந்தைகள் முதியவர்கள் இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான ( எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவை சாந்தி ஆசிரமம் தலைவர் மருத்துவர் வினு அரம் தலைமை இளைஞர் அணி பொறுப்பாளர் விஜயராகவன் வழிநடத்தினார். நிகழ்வில் பல்வேறு சமயத் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், ஹார்வெஸ்டர் மிஷின் செயலாளர் ஃபாதர் ரூபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவில் அப்துல் ஹக்கீம் பேசும்பொழுது,

விவசாயிகள் விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவமும் நோய் நிவாரணம் பற்றியும் சமூக ஒற்றுமையை பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் பொன்மொழிகள் இலிருந்து எடுத்துக்காட்டுடன் உரையாற்றினார்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு நடைபெற்றது. விவசாயிகளை நினைவு கூர்வதற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஏழை-எளிய மற்றும் நோயாளிகளை பராமரிப்பது போன்ற பணிகளுக்கான சிறப்பு நிகழ்வாக இது இருந்தது.

நிறைவில் ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா நடராஜன் பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க