• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சம்ஹிதா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அசத்திய பள்ளி குழந்தைகள்

August 14, 2022 தண்டோரா குழு

கோவை சம்ஹிதா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், நிலம்,நீர்,காற்று என ஐம்பூதங்களை நாடகம்,நடன அசைவுகளுடன் பள்ளி குழந்தைகள் அசத்தினர்.

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் 2022-23 ஆம் கல்வி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.ஐம்பூதங்களான நிலம்,நீர்,காற்று, நெருப்பு,மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் கருத்து மற்றும் தகவல்களை மையமாக கொண்டு நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,பள்ளியின் முதல்வர் ராதா பள்ளியின் செயல்பாடு மற்றும் மாணவ,மாணவிகள் சாதித்த சாதனைகள், குறித்து பேசினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், கடந்த கல்வியாண்டில் விளையாட்டு மற்றும் கலை,பண்பாட்டு துறையில் சாதித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.அப்போது அவர், தற்போதையை நவீன உலகத்தில் குழந்தைகளை வளர்க்கும் முறைகள் குறித்தும்,பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய நடகமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஐம்பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று மற்றும் ஆகாயம் குறித்த நாடகம் மற்றும் நடனங்களை தத்ரூபமாக மாணவ மாணவிகள் மேடையில் அரங்கேற்றினர்.. தொடர்ந்து மாணவ,மாணவிகளின் தமிழக கிராமிய கலைகளாக கிராமிய பாட்டுகள் வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் விதமாகவும் சிந்திக்க தூண்டும் விதமாகவும் அமையப்பெற்றது.

விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கர்னல் மோகன் தாஸ் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், ஊழியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க