• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சங்கமேஸ்வரர் திருக்கோயில் தைப்பூச திருத்தேர் திருவிழா

February 10, 2017 தண்டோரா குழு

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோவை சங்கமேஸ்வரர் திருக்கோயில் தைப்பூச திருத்தேர் பவனி பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர்.

கோவை மாநகர மையமான டவுன் ஹால் பகுதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதியும் தைப்பூச திருநாளன்றும் திருத்தேர் பவனி நடைபெறும்.

தைப்பூச திருநாளை முன்னிட்டு அத்திருக்கோவிலிலிருந்து பவனி நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க பவனி தொடங்கியது.

தேர்ப்பவனி ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு, உக்கடம், என்.எச் சாலை வழியாக உலா வந்து, மீண்டும் திருக்கோவில் முன்பாக நிறைவடைந்தது.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் தேர்ப் பவனி செல்வதற்கு அந்த சிறுபான்மை மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த தேரோட்டம் கடந்த 5 ஆண்டுகளாகப் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளியன்று தேரோட்டம் நடைபெற்ற பாதையில் 360 டிகிரி கோணமுடைய கண்கானிப்பு கேமரா மூலம் நூற்றுக்கனக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க