• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கோனியம்மன் கோவிலின் இடத்தில் உள்ள பார்க்கிங்கை அகற்ற வேண்டும் – எச்.ராஜா

February 17, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள 38,635 கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடித்து கட்டப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய  செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை கோனியம்மன் கோவிலில் பேசிய பாஜக தேசிய  செயலாளர் எச்.ராஜா,

“கோவை கோனியம்மன் கோவிலின் குளம் இடத்தில் உள்ள பார்க்கிங்கை அகற்றி, கோவிலிடம் மாநகராட்சி உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

இந்து கோவில் சொத்துக்கள் 4,72,234 ஏக்கர், 22,000 கட்டிடங்கள், 33,000 மனைக்கட்டுக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக எடுத்துக்கொண்டு கோவில் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களை குழு அமைத்து தமிழக முதல்வர் விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும்.

அறநிலையத்துறை கோவில்களையும், கோவில் சொத்துகளையும் காப்பற்றாவில்லை என்றும்,10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடிபாடுடன் பூஜைகள் செய்யாமல் உள்ளது என்றார்.

மேலும்,உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக எடுத்துக்கொண்டு,கோவில் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது, என்பன உள்ளிட்ட விபரங்களை குழு அமைத்து தமிழக முதல்வர் விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும்.

கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்தால், நேரடியாக மீட்கவும், அதில் தடை உத்தரவும் பெற முடியாது என இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமுண்டு.ஆனால் இந்து அறம் அழிக்கின்ற துறையாக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.

தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை மறுப்பவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள்” என்று கூறினார்.

மேலும் படிக்க