• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொரோனோ வைரஸை தடுக்கும் பார்முலா 2 நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

March 19, 2020 தண்டோரா குழு

மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பான எஸ்ஆர்எம் யூ இணைந்து கோவை ரயில் நிலையத்தில் கொரோனோ வைரஸை தடுக்கும் பார்முலா 2 நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சித்தர் சிவ சண்முகசுந்தரம் பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். தொடர்ந்து ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து சித்தர் சிவ சண்முகசுந்தரம் பாபுஜி சாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது,

உலகெங்கும் பயமுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.நமது உடம்பில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த விதமான விஷ காய்ச்சலும் நம்மை அண்டாது இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கோவை ரயில் நிலையத்தில் இன்று பத்தாயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறோம். தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு இந்த மாதத்திற்குள் நிலவேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி நடப்பதை அறிந்த ரயில் பயணிகள் ஏராளமானோர் நீலவேம்பு கசாயத்தை வாங்கி பருகி சென்றனர்.

மேலும் படிக்க