• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை-கேரள எல்லைப்பகுதிகளில் மதுவாங்கி வருபவர்களை கண்காணிக்க தீவிர சோதனை

June 24, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மற்றும் கேரளா மாநில எல்லைப்பகுதிகளில் மதுப்பிரியர்கள் மதுப்பாட்டில்கள் வாங்கி வருவதை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ள காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.மேலும் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் கோவை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கேரள மாநிலம் எல்லைப்பகுதிகளில் இருந்து மது வாங்கிக்கொண்டு வருகின்றனர்.

இதனை தடுக்க கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டிகல்களை எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பிரதான சோதனைச்சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இனைந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க