• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

June 13, 2018 தண்டோரா குழு

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கோவை குற்றால அருவிக்கு நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நேற்று ஒரு நாள் 312 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக கோவை குற்றால அருவிக்கு செல்ல வனத்துறை நான்காவது நாளாக தடை விதித்துள்ளது.

அதிகப்பட்சமாக வால்பாறை அடுத்த சின்னகல்லாறு பகுதியில் 103 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.குறைந்த பட்சமாக கோவையில் உள்ள பீளமேடு பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்னும் சில தினங்களில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

மேலும் படிக்க