• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

February 14, 2020

கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை குறிச்சி பொங்காளியம்மன் கோவில் அருகில் குளத்தில் அடையாளம் தெரியாத பென் சடலமாக மிதப்பதாக கோவை போத்தனூர் காவல் நிலையத்திற்கும், தீயனைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளார்கள். இதனையடுத்து மீட்புபணிக்கு வந்த தீயனைப்பு படை வீரர்கள் போலீசாருக்காக 2 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்தனர். சடலத்தை மீட்டு யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் காத்திருப்பதாக தீயனைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த குளத்தில் இறங்கும் வசதிக்காக படிதுறைகள் இருந்தது. சாலை அகலப்படுத்துவதற்காக மண்களை கொட்டி படிதுறைகள் மூடப்பட்டதாலும், நீர் நிறம்பியுள்ள குளத்திற்கு எந்த பாதுகாப்பு வேலியும் இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

மேலும் படிக்க