• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் திதி

February 14, 2018 தண்டோரா குழு

கோவை தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் தொண்டர்கள் 20ம் ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு  எதிர்கட்சி தலைவராக இருந்த  அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்ப முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒன்றும் அறியாத பெரியவர்கள்,  குழந்தைகள்  என 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள்  20 ஆம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.

கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த  குண்டு வெடிப்பு  வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் இறந்தவர்களின் நினைவாக ஆர் எஸ் புரம் டி பி ரோட்டில் நினைவுத்தூண் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

மேலும் படிக்க