February 14, 2018
தண்டோரா குழு
கோவை தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் தொண்டர்கள் 20ம் ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு எதிர்கட்சி தலைவராக இருந்த அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்ப முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒன்றும் அறியாத பெரியவர்கள், குழந்தைகள் என 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள் 20 ஆம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.
கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் இறந்தவர்களின் நினைவாக ஆர் எஸ் புரம் டி பி ரோட்டில் நினைவுத்தூண் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.