• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் ஆண் சடலம் மீட்பு

August 24, 2018 தண்டோரா குழு

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம் ஒன்று தலைகுப்புற கிடக்கும் நிலையில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.

முகம் நீருக்கு அடியில் மூன்று நாட்கள் ஊறியதால் மீன்கள் அரித்து சிதையுண்டு காணப்படுகிறது. இதனால் இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. எனினும், அப்பகுதியில் கடந்த சில தினங்களாக சுற்றி திரிந்த நபர்தான் இறந்தவர் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க