• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் ஆண் சடலம் மீட்பு

August 24, 2018 தண்டோரா குழு

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம் ஒன்று தலைகுப்புற கிடக்கும் நிலையில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.

முகம் நீருக்கு அடியில் மூன்று நாட்கள் ஊறியதால் மீன்கள் அரித்து சிதையுண்டு காணப்படுகிறது. இதனால் இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. எனினும், அப்பகுதியில் கடந்த சில தினங்களாக சுற்றி திரிந்த நபர்தான் இறந்தவர் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க