• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கவுண்டம்பாளையத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து

January 25, 2020

கோவை கவுண்டம்பாளையம் அருகே தமிழ்நாடு அரசு விரவு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே தமிழ்நாடு அரசு விரவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு தொலை தூரம் செல்லும் வெளியூர் அரசு பேருந்துகள்களை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று பணிமனையில் இருந்து வெளியே செல்ல கிளம்பிய ஒரு பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. உடனடியாக கோவை வடக்கு தீயனைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விரைந்து வந்த தீயனைபுதுரையினர் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.அதற்குள்ளாக பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசார்ணையில் தெரியவந்துள்ளது. பேருந்து தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க