• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

December 12, 2019

கோவை கரும்புக்கடை பகுதியில் நொய்யல் ஆற்றின் ராஜா வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் இடையே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சாலை அருகே மற்றும் நொய்யல் ஆற்றின் ராஜவாய்க்காலில் உள்ள சுமார் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை காலி செய்யாத நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பெக்லென் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி வருகின்றனர்.

இராஜவாய்க்காலை 20 அடிக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் கோவை வாலாங்குளத்தில் இருந்து வெளியேரும் நீர் தடைபட்டு மழைக்காலங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மேம்பாலம் பணிகள் நடைபெற்றுவருவதால் சாலை அகலப்படுத்தும் விதமாகவும் பொதுப்பணித்துறை அதிகாரி விமலா தலைமையில் அதிகாரிகள், 500 மீட்டர் தூரத்திற்க்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க காவல்துறை உதவி ஆணையாளர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் அதிகமான போலீசார் இந்தபகுதியில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க