• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கருமத்தம்பட்டியில் தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்ட அரங்கேற்றம்

May 28, 2018 தண்டோரா குழு

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது.

வண்ண உடைகளை உடுத்தி அமர்ந்தும், நிமிர்ந்தும் லவகமாக வளைந்தும் ஆடும் இந்த கலை தான் ஒயிலாட்டம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான இந்த ஒயிலாட்டம், தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் ஒயிலாட்ட அரங்கேற்றம் ஞாயிறன்று இரவு நடைபெற்றது. இதில் 5 வயது முதல் 50 வயது வரை 80 நபர்கள் அரங்கேற்றம் செய்தனர். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ், இலவசமாக கிராம தோறும் சென்று ஒயிலாட்ட கலையை வளர்த்து வருகிறார்.

கிராமிய பாடலுடன் மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம் தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடைபெற்றது. ஒயிலாட்டம் ஆடும் போது, உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைந்து புத்துணர்வு ஏற்படுவதாக கலைஞர்கள் கூறுகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைங்கர்கள் உருவாகி இருப்பதாகவும், வரும் மாதங்களில் இந்த கலையை மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் பரப்பும் வகையில் அங்கு சென்று ஒயிலாட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும், இந்த கலையை தமிழர்கள் உள்ள நாடுகளில் பரப்ப திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.

மேலும் படிக்க