• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கண்ணம்மநாயக்கனூரில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

February 7, 2018 தண்டோரா குழு

கோவை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவையை அடுத்த கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பல முறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர், ஆனாலும் சம்மந்தபட்ட அதிகாரிகள் உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். இதையடுத்து கிணற்றை தூர் வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நான்கு மணி நேர போராட்டத்தால் அப்பகுதியில் பேருந்து இன்றி கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க