• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கண்ணம்மநாயக்கனூரில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

February 7, 2018 தண்டோரா குழு

கோவை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவையை அடுத்த கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பல முறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர், ஆனாலும் சம்மந்தபட்ட அதிகாரிகள் உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். இதையடுத்து கிணற்றை தூர் வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நான்கு மணி நேர போராட்டத்தால் அப்பகுதியில் பேருந்து இன்றி கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க