• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஒண்டிப்புதூரில் 5வயது மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்த தாய்

October 18, 2019 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூரை வேதவள்ளி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி. இவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக அங்கு வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர் கண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த போது இறந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருடன் இவர்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அக்கம் பக்கத்தினருக்கு விவரம் ஏதும் தெரியவில்லை. வேதவள்ளியின் உடலை கைப்பற்றிய சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மேலும் படிக்க